இலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக்குவதே இலக்கு : பிரதமர்

இலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றி அமைப்பதே எங்களின் பிரதான இலக்காக இருக்கிறது.

கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையை அபிவிருத்தி பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது. தெற்கு முனையின் அபிவிருத்தியோடு இடைநிறுத்த போவதில்லை. விரைவில் வடக்கு முனை அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பிக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பயணிகளின் நலன் கருதி படகுப் போக்குவரத்து சேவை இன்று பிரதமர் கொழும்பு பேர வாவியில் ஆரம்பித்து வைத்தபோதே நிகழ்வில் கலந்துக்கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!