உலகின் வேகமாகக் கார் ஓட்டும் பெண் ஓட்டுநர் ஜெஸிகா உயிரிழப்பு!

உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் எனப் பெயரெடுத்த ஜெஸிகா கோம்ப்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸிகா ஜெட் விமானத்தின் இயந்திரத்தைப் பொருத்தி கார் ஓட்டுவதில் வல்லவர். இதன் காரணமாகவே உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் எனப் பெயரெடுத்தவர்.

கடந்த 2013ம் ஆண்டு 398 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி சாதனை செய்தார். இதனைத் தொர்ந்து 483 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கி தனது சாதனையை தானே முறியடித்தார். இந்நிலையில் இந்தச் சாதனையையும் முறியடிக்க அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக தென்மேற்கு ஓரேகான் பகுதியில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கார் விபத்துக்குள்ளானதில் ஜெஸிகா உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!