இன்ப அதிர்ச்சி தர வந்த மகளை கொலை செய்ய முயன்ற தாய்!

அமெரிக்காவில் சொல்லாமல் வீட்டுக்கு வந்து இன்ப அதிர்ச்சி தர முயன்ற இளம்பெண் பெற்ற தாயாலாயே துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திருடன் யாரோ ஊடுருவி விட்டதாகக் கருதிய பெண் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு தனது படுக்கை அறையின் கதவை திறந்து வைத்து காத்திருந்தார். அப்போது உள்ளே ஒருவர் நுழைந்ததும் பாய்ன்ட் 38 ஸ்பெஷல் ரிவால்வர் துப்பாக்கியால் ஒருமுறை சுட்டார். பின் சுடப்பட்டது தான் பெற்ற மகள் என உணர்ந்த அவர், பதறித் துடித்தார். கையில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

18 வயதான தனது மகள் கல்லூரியில் படித்து வருவதாகவும் சம்பவத்தன்று அவர் வீட்டுக்கு வருவதை சொல்லாமலேயே, திடீரென இன்ப அதிர்ச்சி தரும் பொருட்டு நுழைந்ததை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் பதற்றத்தில் யாரோ என நினைத்து சுட்டுவிட்டதாகவும் தாய் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த 2017ம் ஆண்டு மட்டும் துப்பாக்கிச் சூட்டில் 40 ஆயிரம் பேர் பலியாகினர். அவற்றில் ஆயிரத்து 112 பேர் தவறுதலாக சுடப்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!