பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி மீது காவலர் கொலைவெறி தாக்குதல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்தர ஜடேஜாவின் மனைவி ரீவா, குஜராத் மாநிலம் ஜாம் நகரின் சாரு செக்‌ஷன் சாலையில் நேற்று காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது கான்ஸ்டபிள் ஓட்டிச் சென்ற மோட்டார்பைக்கை கார் உரசியது. இதில் ஆத்திரமடைந்த கான்ஸ்டபிள், ரீவாவின் தலைமுடியை கொத்தாக பற்றி தரதரவென வெளியே இழுத்து நடுரோடு என்றும் பாராமல் பளார், பளார் என ரீவாவை அறைந்தார்.

இதைக் கண்ட பொது மக்கள், அச்சத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்தனர். எனினும் சுதாரித்துக் கொண்ட பலரும் ஓடிச் சென்று போலீஸ்காரரை மேலும் தாக்கவிடாமல் மடக்கிப் பிடித்து காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். தாக்குதல் தொடுத்த கான்ஸ்டபிள் சஜய் ஆஹிரை கைது செய்துள்ளதாகவும், கருணையின்றி நடந்து கொண்ட அவர் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் காவல்துறை எஸ்பி பிரதீப் செஜுள் தெரிவித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரராகவும் தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் ஆடி வரும் ஜடேஜாவின் மனைவி மீது போலீஸ்காரர் அரங்கேற்றிய கொடூர தாக்குதல் அனைத்து தரப்பிலும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!