துப்பாக்கி முனையில் 16 வயது சிறுமி பலாத்காரம்!

உத்தரப்பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் 16 வயது தலித் சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரனை கையும் களவுமாக போலீசில் பிடித்துக் கொடுத்தும் வழக்குப் பதிவு செய்யாமல் போலீசார் அலட்சியமாக விட்டுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தில் கடந்த 3.ம் தேதி தலித் ஒருவரின் வீடு புகுந்த பவா சிங் என்ற கொடூரன் நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. கையும் களவுமாக பவா சிங்கைப் பிடித்த குடும்பத்தினர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்துள்ளனர்.

ஆனால் வழக்குப் பதிவு செய்ய மறுத்த காவல்துறையினர் அவன் அங்கிருந்து செல்ல அனுமதித்ததாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து காவல்துறை கண்காணிப்பாளரிடம் குடும்பத்தினர் புகாரளித்த நிலையில் நேற்று முன்தினமே வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டவனைத் தேடி வருவதாகவும் போலீசார் பதில் அளித்து சமாளித்துள்ளனர்.

கையில் பிடித்துக் கொடுத்தும் சிறுமியை பலாத்காரம் செய்தவன் என்றும் கூட பார்க்காமல் கொடூரனைத் தப்பிச் செல்ல அனுமதித்த காவல்நிலையத்தினருக்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!