பிரிகேடியருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

சுத்தமான குடி நீரைக் கோரி ஆர்ப்பாட்டம் செய்த ரத்துபஸ்வல பிரதேச மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, மூவரைக் கொலை செய்த விவகாரம் தொடர்பில் இராணுவத்தின் பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட நால்வருக்கு எதிராக சட்டமா அதிபர் நேற்று கம்பகா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடுத்துள்ளார்.

வெலிவேரிய – ரத்துபஸ்வல பகுதியில் துப்பாக்கி பிரயோகம் நடத்தி மூன்று பேரை கொலை செய்தமை, தாக்குதல் நடத்தி சிலரை காயப்படுத்தியமை உள்ளிட்ட 94 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரத்துபஸ்வல பகுதியில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது. துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், 12 பேர் காயமடைந்தனர். பிரதேச மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 21 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!