ஐ.நா முடிவினால் சிறிலங்கா அதிர்ச்சி – அவசரமாக பேச முயற்சி

ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் இருந்து சிறிலங்கா படையினரை நிறுத்துவதற்கு ஐ.நா எடுத்துள்ள முடிவு குறித்து, ஐ.நாவுடன் சிறிலங்கா அரசாங்கம் அவசர பேச்சுக்களை நடத்தவுள்ளது.

சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க, நியூயோர்க்கில் நாளை, அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான ஐ.நாவின் உதவிச்செயலரை அவசரமாகச் சந்தித்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 74 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான சிறிலங்கா குபுழு தற்போது நியூயோர்க் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!