உண்மையை வெளிப்படுத்தக் கோரி போராட்டம்!

லிலத் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் போய் 8 வருடங்கள் கடந்த நிலையில் அவர்களை வெளிப்படுத்துமாறு கோரி முன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் இச்செயற்பாட்டாளர்கள் காணாமல் போயிருந்தார்கள். இது தொடர்பிலான வழக்கு யாழ். நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னிலையாகுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்ட போதும் பாதுகாப்பினை காரணம் காட்டி அவர் முன்னிலையாகவில்லை.

எனவே வழக்கில் முன்னிலையாகி உண்மைத் தன்மையினை வெளிப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதற்கு முன்னதாக யாழ் பொதுநூலகத்தில் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது. இதில் குமார் குணரட்ணம் கலந்துகொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!