இந்திய இராணுவ ஹெலிகொப்டர் வீழ்ந்து நொறுங்கியதில் இருவர் பலி!

இந்திய இராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று பூட்டானில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய இராணுவத்தின் சீத்தா என்ற ஹெலிகொப்டரே இவ்வாறு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி ஹெலிகொப்டர் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் கிர்மூவிலிருந்து பூட்டானின் யோங்க்ஃபூல்லா பகுதியை நோக்கி புறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பூட்டானில் நிலவிய மோசமான வானிலை காரணாக இந்திய நேரப்படி சரியாக ஒரு மணியளவில் கட்டுபாட்டு அறையுடன் தொடர்பை இழந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் இந்திய விமானி மற்றொருவர் பூட்டான் நாட்டை சேர்ந்த விமானி.

பூடான் நாட்டை சேர்ந்த விமானி இந்திய இராணுவத்தில் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!