எனக்கு விஷம் கொடுத்து கொல்ல பார்க்கிறாள்: நீதிமன்றத்தில் கதறிய கணவன்

நைஜீரியாவில் கணவனும், மனைவியும் ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி புகார் அளித்து கொண்ட நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. சிராஜோ அப்துல்லாயி மற்றும் அவர் மனைவி நசிரா ஆகிய இருவரும் சமீபத்தில் குடும்ப நீதிமன்றத்தை நாடினார்கள். அப்போது சிராஜோ கூறுகையில், என் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ள நிலையில் எனக்கு விஷம் கொடுத்து கொல்லப்பார்க்கிறார் என கூறினார்.

நசிரா கூறுகையில், என்னை சிராஜோ அடிப்பதோடு, தனது திருமண கடமைகளை செய்யவில்லை என கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அவர்களின் பெற்றோர்களையும் விசாரித்தார்.

இதையடுத்து இனி சிராஜோவும், நசிராவும் இணைந்து வாழ்ந்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது என கூறிய நீதிபதி இருவருக்கும் நடந்த திருமணத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.இதன் பின்னர் இருவரும் தனித்தனியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!