“ஆட்சி மாற்றம் ஏற்­பட்டால் ரணில் சிறை­செல்ல நேரிடும்”: மஹிந்த யாப்பா

ஆட்சி மாற்றம் ஏற்­பட்டால் தான் சிறை­செல்ல நேரிடும் என்­பதை அறிந்தே பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ­விற்கு எதி­ராக பல சட்ட சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். அனைத்து சவால்­க­ளையும் எதிர் கொண்டு மாற்று வழி­களை பிர­யோ­கித்து ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெறுவோம் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்த யாப்பா அபே­வர்­தன தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­மு­னவின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஐக்­கிய தேசிய கட்­சியின் முழு ஒத்­து­ழைப்­பு­ட­னேயே மத்­திய வங்­கியின் பிணை­முறி மோசடி இடம் பெற்­றது. அமைச்­ச­ர­வையில் உள்ள பெரும்­பா­லானோர். இம்­மோ­ச­டி­யுடன் தொடர்­புப்­பட்­ட­வர்கள். அவர்­களே இன்று ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு ஆத­ர­வாக அணி­தி­ரண்­டுள்­ளார்கள்.

பிணை­முறி மோசடி விவ­காரம் குறித்து ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாஸ இது­வ­ரையில் எவ்­வித கருத்­துக்­க­ளையும் தெரி­விக்­க­வில்லை. அவ்­வாறு தெரி­வித்தால் கட்­சியின் ஆத­ரவு கிடைக்­காது.

எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சி தோற்றம் பெற்றால் மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் நாட்­டுக்கு அழைத்து வரப்­ப­டுவார். அதன் பின்னர் தான் சிறை செல்ல நேரிடும் என்­பதை அறிந்தே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பய ராஜ­ப­க்ஷ­விற்கு எதி­ராக பல சட்ட சிக்­கல்­களை மேற்­கொண்­டுள்ளார்.

முன்னாள் பிர­தமர் சிறி­மாவோ பண்­டார நாயக்­கவின் குடி­யு­ரி­மை­யினை ரத்து செய்­வ­தற்­கான அர­சியல் சூழ்ச்­சி­யினை ஐக்­கிய தேசிய கட்சி மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியே தற்போதும் முன்னெடுக்கப்படுகின்றது. மாற்று வழியினை பிரயோகித்தாவது பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்று தகுந்த பாடம் கற்பிக்கும் என்றா

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!