வெற்றி பெறுவது உறுதி!

ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெறுவது உறுதி என்று இரு பிரதான வேட்பாளர்களான கோத்தாபய ராஜபக்‌ஷவும் சஜித் பிரேமதாஸவும் தெரிவித்தனர். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்று கையளிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

வேட்புமனுத் தாக்கலின் போது இருவரும் கைகுலுக்கிக் கொண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

அதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சஜித் பிரேமதாசவிற்கும் தனக்குமிடையில் கொள்கை ரீதியில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பினும், அவருக்கு மதிப்பளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

சஜித் பிரேமதாசவிற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் புகைப்படத்தை அவருடைய உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திரருக்கும் அவர், அதன் ‘இன்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தேர்தல்கள் ஆணைக்குழுவில் சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்தேன். போட்டியாளர்கள் தத்தமது கொள்கைகளில் ஒருவருக்கொருவர் முரண்பட்டாலும் கூட, ஒருவர் மீதொருவர் மரியாதை கொண்டிருப்பர் என்பதே என்னுடைய நம்பிக்கையாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!