பொலிஸ் காவலில் இருந்து தப்பியோடியவர் சிக்கினார்!

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த போது, பொலிஸ் நிலைய கூண்டில் இருந்து தப்பிச் சென்றவர், இரண்டு வாரங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்

கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி ஹெரோயின் போதை பொருளை வைத்திருந்தார் எனும் குற்றசாட்டில் யாழ்ப்பாணம்- ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பொலிஸ் நிலைய சிறைக்கூட இரும்புப் கதவின் பூட்டினை சரியாக பொலிஸார் பூட்டாதால், அதனை திறந்து சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்று தலைமறைவானார்.

சம்பவத்தை அடுத்து ரிசேர்வ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். தப்பி சென்ற நபரை கடந்த இரு வார காலத்திற்கு மேலாக பொலிஸார் தேடி வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரைக் கைது செய்த யாழ்ப்பாணம் சிறப்பு பொலிஸ் பிரிவினர், பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!