பயங்கரவாதத்தினூடாக பிரிக்க முடியாத நாட்டை அரசியலமைப்பினூடாக பிரிக்க சதி

பயங்கரவாதத்தின் மூலமாக பிரிக்க முடியாத நாட்டினை அரசியல் அமைப்பின் மூலமாக பிளவுபடுத்தவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி முயற்சிக்கின்றதாக விஜயதாச ராஜபக்ஷ எம்.பி கூறினார்.

மக்கள் மத்தியில் சஜித் பிரேமதாசவா அல்லது கோத்தாபய ராஜபக்ஷவா என்ற போட்டியாகவே இந்த தேர்தல் கணிக்கப்படுகின்றது. ஆனால் தனி நபர்களை இலக்கு வைத்து இந்த தேர்தலை எவரும் பார்க்கக்கூடாது. சஜித் பிரேமதாச சரியான நபராகக இருந்தாலும் கூட அவரை களமிறக்கியுள்ள அணி மேற்கு நாடுகளின் கூட்டணியாகும்.

ஆகவே இந்த நாட்டினை பாதுகாத்து இறைமையுள்ள, ஜனநாயக நாடாக தக்க வைக்க வேண்டும் என்றால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியையே ஆதரிக்க வேண்டும். நாட்டினை பாதுகாக்கும் நபருக்கே வாக்களிக்க வேண்டோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!