தேர்தலைப் புறக்கணிக்கக் கோருகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காது புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை கோருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைத்தீவில் கடந்த பலதசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுகாணப்படவேண்டியது அவசியமானதாகும். அந்தநோக்கில் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தீரக்கமானமுடிவுகளை எடுத்துபேரம்பேச வேண்டியநிலையில் நாம் உள்ளோம்.

இத் தேர்தலில் போட்டியிடும் பிரதானகட்சிகள் இனப்பிரச்சினைத் தீர்வுதொடர்பாகவும் பொறுப்புக் கூறல் தொடர்பாகவும் ஏற்கனவேதமதுஉத்தியோகபூர்வமானநிலைப்பாடுகளைவெளிப்படுத்தியுள்ளனர். சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டுபிரதானவேட்பாளர்களில் ஸ்ரீலங்காபொதுஜன பெரமுனவேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச–“தமிழர் நலன்கள் சார்ந்துமுன்வைக்கப்படுகின்றஎந்தவொருநிபந்தனையையும் ஏற்கமாட்டேன்” என்றும், ஜனநாயக தேசியமுன்னணி வேட்பாளர் சஜித் பிறேமதாசா“தமிழர் தரப்புடன் எந்தவொருஉடன்படிக்கைக்கும் செல்லமாட்டேன்”என்றும் கூறிதமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறந்தள்ளியுள்ளனர். குறிப்பாகஒற்றையாட்சித் தீர்வைத் தவிரவேறுஎதற்கும் தாம் இணங்கமாட்டோம் எனவும்,ஏற்கனவேஉள்ளஒற்றையாட்சிக் கட்டமைப்பைமேலும் வலுப்படுத்தும் நோக்கம் மட்டுமேதமக்குஉண்டெனவும் வேண்டுமானால் ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைபரவலாக்கமுடியுமென்றும் தெரிவித்துள்ளனர். சமஸ்டி என்பதனைஅடியோடுநிராகரிப்பதாகவும் அனைத்துத் தரப்புக்களும் கூறியுள்ளனர்.

இதற்குமேலதிகமாக இது ஓர் சிங்களபௌத்தநாடுஎன்பதனையும் அதன் அடையாளத்திற்குஎந்தவொருபாதிப்பும் ஏற்படாதவகையில் தாம் செயற்படுவோம் எனவும் சிறீலங்காபடைத்தரப்புக்கள் போர் வீரர்கள் என்றும் அவர்களைஎந்தவொருநீதிமன்றின் முன்னாலும் நிறுத்தமாட்டோம் என்றும் அவர்களைப் பாதுகாப்பதுதங்களதுதார்மீகக் கடமைஎன்றும் அவர்களதுகௌரவத்தைதாம் நிலைநாட்டுவோம் என்றும் கூறியுள்ளனர்.

மேற்படிகொள்கைகளைஅவர்கள் நடைமுறைப்படுத்தும்போதுதமிழ்த் தேசத்தின் மீதானகட்டமைப்புசார் இனவழிப்புமேலும் தீவிரமடையும் என்பதிலும் எவ்விதசந்தேகமும் இருக்கமுடியாது. இந்தக் கொள்கைப் பிரகடனங்கள் வெளியாகியுள்ளநிலையில் தமிழ்; மக்களாகியநாம் இத்தேர்தலில் இவர்களுக்குவாக்களிப்பதால் எந்தநன்மையும் அடைந்துவிடப்போவதில்லைஎன்பதுவெளிப்படையானது.

இந்நிலையில் இத்தேர்தலில் கலந்துகொண்டு மேற்குறித்த நிலைப்பாடுகளையுடைய பிரதானவேட்பாளர் எவருக்காவது வாக்களிப்பதானது தமிழ்த் தேசம் தனதுஅடிப்படைநிலைப்பாடுகளைக் கைவிட்டு சிங்களபௌத்தத்தினுள் கரைந்துசெல்லத் தயார் என்பதான தவறானசெய்தியை உலகத்திற்குவழங்குவதாகஅமையும். இப்பின்னணியிலே ஈழத் தமிழ்த் தேசம் இந்தத் தேர்தலில் எந்தவொருவேட்பாளருக்கும் வாக்களிக்காது புறக்கணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதே தவிரமாற்றுவழிகள் எதுவுமே கிடையாது.

எனவே இவ்ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொருவேட்பாளருக்கும் வாக்களிக்காதுபுறக்கணிக்குமாறுதமிழ் மக்களைகோருகின்றோம்.

புறக்கணிப்பை கைவிட்டு வாக்களிக்க வேண்டுமானால்! தேர்தல் புறக்கணிப்பு முடிவை தமிழ் மக்கள் கைவிட்டு தமக்குவாக்களிக்கவேண்டும் எனயாராவது பிரதானவேட்பாளர்கள் விரும்புவார்களாக இருந்தால் அத்தரப்பும் அத்தரப்பினை ஆட்சிக்குக் கொண்டு வரவிரும்பும் சர்வதேச வல்லரசுகளும் பின்வரும் கோரிக்கைகளை சட்டரீதியாக அங்கீகரிக்கவேண்டும்.

சர்வதேசசமூகத்தினரும், ஜனாதிபதிவேட்பாளர்களும் உத்தரவாதம் வழங்க வேண்டிய கோரிக்கைகள்

1. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதியஒற்றையாட்சிஅரசியல் யாப்பிற்கான இடைக்காலஅறிக்கை நிராகரிக்கப்படல் வேண்டும்.

2. தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கைத் தீவின் இணைந்த வடக்கு – கிழக்குதமிழ் பேசும் மக்களின் தேசம் என்பதனையும் அதன் தனித்துவமான இறைமையையும் அங்கீகரிக்க வேண்டும் என்பதுடன் சுயநிர்ணய உரிமையை முழுமையாக அனுபவிக்கக் கூடியசமஸ்டித் தீர்வை பெற்றுத்தருவதனை உறுதிசெய்ய வேண்டும்.

3. தமிழ்த் தேசத்தின் மீது இடம்பெற்ற மனிதத்துவத்திற்கு எதிரானகுற்றங்கள்,போர்க்குற்றங்கள், இனவழிப்புக்குற்றங்கள் தொடர்பில் முழுமையானசர்வதேசபக்கச் சார்பற்ற விசாரணை சர்வதேசகுற்றவியல் நீதிமன்றம் ஊடாக அல்லது விசேடகுற்றவியல் தீர்ப்பாயம் ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

4. வடக்கு – கிழக்குயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக பிரகடனப்படுத்தப்பட்டு இப்பிரதேசத்தைமீளக் கட்டியெழுப்புதல் மற்றும் நிலையான அபிவிருத்திஎன்பவற்றைமேற்கொள்வதற்குத் தேவையான நிதியை கையாள்வதற்கு வடக்கு – கிழக்கில் தெரிவு செய்யப்பட்டமக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் ஓர் பொதுக் கட்டமைப்புஉருவாக்கப்பட்டுஅதற்கானநிதிநேரடியாகக் கிடைப்பதனைசர்வதேசசமூகம் உறுதிப்படுத்தவேண்டும்.

5. பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாகநீக்கப்படல் வேண்டும்.

6. தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றிவிடுதலைசெய்யப்படல் வேண்டும்.

7. வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களதுவிவகாரத்தில் சர்வதேச பொறிமுறைகளின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிவழங்கப்படல் வேண்டும்.

8. சிறீலங்காஆயுதப்படைகள் மீதானபோர்க்குற்றம், இனவழிப்புக் குற்றம் தொடபான விசாரணைகள் முடியும் வரையில் – சிறீலங்கா இராணுவம் வடக்கு – கிழக்கு தமிழர்தாயகத்திலிருந்து வெளியேற்றப்படவேண்டும்.

9. வடக்கு – கிழக்குமாகாணங்களில் நிலைகொண்டிருக்கும் அரசபடைகள் போருக்குமுன்னர் இருந்ததுபோலதமிழ் மக்களின் பாவனையிலிருந்ததனியார் மற்றும் அரசகாணிகளில் இருந்துவெளியேற்றப்பட்டுஅக்காணிகள் அனைத்தும் உடனடியாகவிடுவிக்கப்படுவதுடன் மீள் குடியேற்றநடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.

10. வடக்கு – கிழக்குமாகாணங்களில் அரசஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்களமயமாக்கல்,பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாகநிறுத்தப்படல் வேண்டும்.

11. வடக்கிற்குமகாவலியைதிசைதிருப்புதல் என்றபோர்வையில் வடக்குமாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு மாத்திரமே திட்டமிட்டு செயற்படும் சபையாக மகாவலிஅபிவிருத்திஅதிகாரசபை இயங்குவதால் அச்சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாதுஒழிக்கப்படல் வேண்டும். அத்துடன் கிழக்குமாகாணத்தில் மகாவலிஅபிவிருத்தித் திட்டம் என்றபெயரில் இடம்பெறும் திட்டமிட்டசிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் நிறுத்தப்படல் வேண்டும்.

12. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஸ்கந்த நீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் வன்னிப்பிரதேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

13. தொல்லியல் திணைக்களம்,வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உட்படபல அரசதிணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். மேலே குறிப்பிடப்பட்டதிணைக்களங்கள் ஊடாகநிலங்களை ஆக்கிரமிப்பதற்காக ஏற்கனவே வெளியிடப்பட்டஅரசிதழ்கள் (வர்த்தமானிஅறிவித்தல்கள்) இரத்துச் செய்யப்படல் வேண்டும்.

14. போரினால் பாதிக்கப்பட்டவடக்கு – கிழக்குமாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்துவதனைநோக்கமாகக் கொண்டுவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமிருந்துநேரடிமுதலீடுகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்குஏதுவாக இங்குகாணிகளையும் நிதிகளையும் கையாள்வதில் தற்போதுஅவர்கள் எதிர்கொள்ளும் சட்டப்பிரச்சினைகள் தீர்க்கப்படல் வேண்டும்.

15. வடக்கு–கிழக்குமாகாணங்களில் அரசமற்றும் தனியார்துறை வேலைவாய்ப்புக்களில் அந்தந்தமாகாணங்களைச் சேர்ந்தமக்களுக்கு முன்னுரிமைவழங்கப்படல் வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!