சிங்கள வாக்குகளால் வெற்றியடைவார் கோத்தா! – விஜயதாச

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலை சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் தீர்­மா­னித்­தாலும் கூட இம்­முறை தேர்­தலில் அது நடக்­காது. பெரும்­பான்மையின மக்களின் வாக்­கு­களால் கோத்­தா­பாய ராஜபக் ஷ வெற்றி பெறுவார் என்று எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­தாச ராஜபக்ஷ தெரி­வித்தார்.

இந்த அர­சாங்­கத்தில் உள்ள அமைச்­ச­ரவை மிகவும் பல­வீ­ன­மான அமைச்­ச­ர­வை­யாகும். நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் தேசிய கொள்­கைக்கும் அமை­வாக எந்த தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை. ஒரு சில அமைச்­சர்கள் தமக்கு தேவை­யான நபர்கள் குறித்து அவர்­க­ளுக்கு சாத­க­மாக செய்ய வேண்­டிய விட­யங்கள், நிலங்­களை விற்கும் நட­வ­டிக்­கைகள் என்­பது குறித்து மட்­டுமே பேசினர். ஹம்­பாந்­தோட்டை துறை­முகம் விற்­கப்­பட்­டி­ருக்­கா­விட்­டி­ருந்தால் ஈஸ்டர் தாக்­குதல் இடம்­பெற்­றி­ருக்­காது. ஈஸ்டர் தாக்­குதல் இடம்­பெற பிர­தான இரண்டு கார­ணிகள் உள்­ளன. தகு­தி­யற்ற பொலிஸ்மா அதிபர் ஒரு­வரை நிய­மித்­த­துடன் ஒரு­சில மோச­மான அதி­கா­ரி­க­ளுக்கு பொறுப்­புக்­களை கொடுத்­தனர். அர­சி­ய­ல­மைப்பு சபையில் நான் அப்­போதும் எதிர்த்தேன். எனினும் பிர­தமர் என்னை தடுத்தார். ஜனா­தி­ப­தியும் தவறு செய்­துள்ளார். ஹேம­சிறி பெர்­னாண்­டோ­விற்கு அதி­கா­ரத்தை கொடுத்­தமை தவ­றாகும்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு கொடுத்து பல நாடு­களின் எதிர்ப்பை சம்­பா­தித்­துக்­கொண்டோம். இந்­தியா, ஐரோப்­பிய ஒன்­றியம், ஜப்பான், அமெ­ரிக்கா ஆகிய அனைத்து நாடு­களும் ஒரு அணி­யாகி இலங்­கைக்கு எதி­ராக செயற்­பட்­டன . இலங்­கைக்குள் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தவும் இதுவே காரணம். சோபா உடன்­ப­டிக்­கையை இலங்­கைக்குள் கொண்­டு­வர அமே­ரிக்கா முழு­மை­யாக முயற்சி எடுத்­தது. இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத அமைப்­புகள் அனைத்தின் உரு­வாக்­க­தா­ரிகள் அமெ­ரிக்கா மட்­டு­மே­யாகும். அவர்­களை கொண்டு அமெ­ரிக்கா இயக்­கி­ய­மைக்கு அமை­யவே இலங்­கையில் ஈஸ்டர் தாக்­குதல் இடம்­பெற்­றது என்­பதே உண்மை.

அதேபோல் தேசிய பாது­காப்பு விட­யத்தில் ஐக்­கிய தேசிய கட்சி பல­வீ­ன­மா­கி­விட்­டது. ஐக்­கிய தேசிய கட்­சி­யினால் தேசிய பாது­காப்பை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு முன்­வைத்­துள்ள 13 அம்சக் கோரிக்­கைகள் மிகவும் மோச­மா­ன­வை­யாகும். இவர்கள் தொடர்ச்­சி­யாக நாட்­டினை குழப்பும் துண்­டாடும் நோக்­கத்தில் மட்­டுமே செயற்­பட்டு வரு­கின்­றனர். ஐக்­கிய தேசிய கட்சி இன்றும் ஆட்­சியில் உள்­ள­மைக்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பே காராணம். ஆகவே தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் அனைத்து கோரிக்­கை­க­ளுக்கும் ஐக்­கிய தேசிய கட்சி தலை சாய்க்கும். சிறு­பான்மை கட்­சி­களின் ஆத­ரவை பெரும் கட்­சிக்கு இம்­முறை வெற்றி கிடைக்கும் என கூற முடி­யாது. கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்­தலில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு இல்லாது மஹிந்த ராஜபக் ஷ வெற்றி பெற்றார். எனினும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தீர்மானித்தது உண்மையாகும். ஆனால் இம்முறை பெரும்பான்மை வாக்குகளினால் கோத்தாபாய ராஜபக் ஷ வெற்றி பெறுவார். இதில் கிறிஸ்தவ மக்களின் முழுமையான வாக்குகள் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!