ஈழக்கனவை கைவிட்டு விட்டனர் புலம்பெயர் தமிழர்கள்! – வடக்கு ஆளுநர்

ஈழக்கனவை புலம்பெயர் தமிழர்கள் கைவிட்டு விட்டனர் என்றும் அவர்கள் தற்போது வடக்கு அபிவிருத்திக்கு ஒத்துழைக்க தயாராகவுள்ளனர் என்றும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அண்மையில் தான் பிரான்சுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் பலரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார். அந்த சந்திப்பின் போதே அவர்கள் மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்ததாகவும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!