பதவிக்கு வந்ததும் புதிய பிரதமர் – சஜித் அறிவிப்பு

தாம் பதவிக்கு வந்த பின்னர், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட, புதியவர் ஒருவரை பிரதமராக நியமிப்பேன் என்று புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

நேற்று தொலைக்காட்சி மூலம் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர், முதல் முறையாக அந்தப் பதவிக்கு வருபவராகவும், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு பெற்றவராகவும் இருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட எவரையும் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை என்றும், அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

தமது அமைச்சரவை திறைமையான- இளைஞர்களைக் கொண்டதாக இருக்கும் என்றும், அவர்கள் தமது சொத்துக்களின் விபரங்களை வெளியிட வேண்டியிருக்கும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!