மனைவி மற்றும் மகளிடம் பழி தீர்த்த கணவன்…!

அமெரிக்காவில் விவாகரத்து கோரிய மனைவியை கணவன் கழுத்தை துண்டித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புதனன்று இரவு சுமார் 9.18 மணியளவில், நபர் ஒருவர் தமது சகோதரியின் அலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும்,ஒருமுறை அவரது குடியிருப்புக்கு சென்று பார்வையிட்டு தகவல் தெரிவிக்க முடியுமா என பொலிஸாரிடம் கோரியுள்ளார்.அமெரிக்காவில் இது வாடிக்கை நிகழ்வு என்பதால், அப்பகுதியில் உள்ள ரோந்து பொலிஸாரை குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையிலேயே ரோந்து பொலிஸாரால் அந்த குலை நடுங்க வைக்கும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அந்த குடியிருப்பின் படுக்கை அறையில் 46 வயதான யோனதன் டெட்லா, அவரது மனைவி ஜெனிபர் ஸ்க்லெக்ட்(42) மற்றும் அவர்களது ஐந்து வயது மகள் அபேனேஷ் ஸ்க்லெட்ச் டெட்லா ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.இதில் ஜெனிபரின் தலை துண்டிக்கப்பட்டு, அந்த தலை அவரது மடிமீது வைக்கப்பட்டிருந்தது. சிறுமி அபேனேஷ் கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளார்.மேலும் யோனதன் அந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட நியூயார்க் நகர பொலிஸார், விவாகரத்து கோரியதாலையே மனைவி மற்றும் மகளை யோனதன் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.யோனதன் ஜெனிபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், ஏன் ஜெனிபர் விவாகரத்து கோரினார் என்பதும், பாதுகாப்பு கோரி ஏன் புகார் அளித்தார் என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.விவாகரத்து தொடர்பில் யோனதன் தமது மனைவியை மிரட்டி வந்ததும், அது நடந்தால் அனைவரையும் கொன்றுவிட்டு, தாம் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!