மைத்திரியின் தலைமையில் கடைசி அமைச்சரவைக் கூட்டம் இன்று!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடைசி அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. செவ்வாய்க்கிழமைகளிலேயே அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறுவது வழமை. எனினும், நாளை பூரணை தினம் என்பதால் அமைச்சரவைக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டமே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் இறுதி அமைச்சரவைக் கூட்டமாக இருக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!