முக்கிய அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் வாக்களித்தனர்

சி்றிலங்கா அதிபர் தேர்தலில் அரசாங்கத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், வேட்பாளர்கள் இன்று காலையிலேயே தமது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பொலன்னறுவ சிறி வித்தியாலோக விகாரையில் தமது வாக்கை அளித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு பல்கலைக்கழக வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச நுகேகொட விவேகராமய விகாரையில் வாக்களித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, வீரவில, சுரனிமல ஆரம்ப பாடசாலை வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மெதமுலான டிஏ ராஜபக்ச வித்தியாலயத்தில் வாக்களித்துள்ளார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையிலும், மாவை சேனாதிராசா, சுமந்திரன், சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலும் வாக்களித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!