தாய்லாந்தில் 2 முறை மின்சாரம் பாய்ந்தும் உயிர் தப்பிய பெண்!


தாய்லாந்தில் சாலையில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். நாகோன் ராட்சஷிம்மா என்ற இடத்தில் கடைவீதியில் மலினீ என்ற பெண் ஒருவர் தனது மகனுடன் சென்று கொண்டிருந்தார். சாலையைக் கடக்க முற்பட்டபோது, மின்கம்பி ஒன்று அறுந்து அருகில் இருந்த இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தது.

அப்போது மலினீ பாதாளச்சாக்கடை அருகே நின்ற அவர்மீது நொடிக்கும் குறைவான நேரத்தில் 22 ஆயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கியது. அப்போது அருகில் இருந்த ஒருவர் மலினீயை அங்கிருந்து அகற்றி காப்பாற்றினார். அதன் பின்னரும் தரையில் மின்சாரம் தாக்கியது. அதிலிருந்தும் அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!