சூதாடியவர்களிடம் இருந்து கைப்பற்றிய பணத்துடன் தலைமறைவான போலீசார்!

உத்தரபிரதேசம் காசியாபாத் நகரில் உள்ள இந்திராபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் 3 போலீசார் சூதாடியவர்களிடம் இருந்து கைப்பற்றிய 12 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவாகினர். இச்சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சூதாடுபவர்களை பிடிக்க நகரின் முக்கிய சில பகுதிகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதில் ஒரு ஹோட்டலில் சூதாடிய சிலர் ரூ.12 லட்சம் பணத்துடன் பிடிபட்டனர். இதையடுத்து அவர்கள் இந்திராபுரம் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சட்டரீதியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாமல் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து இரு துணை ஆய்வாளர்கள் மற்றும் ஒரு நிலைய அதிகாரி ஆகியோர் அந்த பணத்தை எடுத்துவிட்டு தலைமறைவாகினர். அவர்கள் மீது ஊழல் தடுப்புப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்களை பிடித்து தருவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது’, என்று தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!