அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய தயார் : மஹிந்த ராஜபக்ஷ

புதிய அமைச்சரவையின் அமைச்சர்களுக்கு வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு , அவர்களோடு சேர்ந்து நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையின் 15 அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோத்தாபய தலைமையில் பதவி பிரமாணம் செய்துக்கொண்டனர்.

இந்நிலையில் அவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு , இடைக்காலை அமைச்சரவையுடன் சேர்ந்து அனைத்து இலங்கையர்களுக்கு சேவை செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!