சம்­பந்தனை இன்று சந்திக்கிறது சுதந்திரக்கட்சி மாற்று அணி

சுதந்­தி­ரக்­கட்­சியின் 16 பேரைக்­கொண்ட மாற்று அணி­யினர் இன்று புதன்­கி­ழமை எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசி­யக்­கூட்ட­மைப்பை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்த­வுள்­ளனர்.

எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் காலை 11.30 மணி­ய­ளவில் நடை­பெ­ற­வுள்ள இந்த சந்­திப்பில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னுடன் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் முக்­கிய கூட்­ட­மைப்பின் முக்­கிய பிர­தி­நி­திகள் சிலரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இதன்­போது நாட்டின் தற்­போ­தைய அர­சியல் நிலைமை மக்கள் விடு­தலை முன்­னணி முன்­வைத்­துள்ள 20 ஆவது திருத்த சட்டம் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் மந்­த­க­தியை அடைந்­துள்­ளமை, தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு, நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

இந்த விட­யங்கள் தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்­சியின் மாற்று அணி­யினர் தமது நிலைப்­பாட்டை எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னிடம் தெரி­விக்­க­வுள்­ளனர்.

குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் மிகவும் ஆர்­வ­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளன.

எனவே இது தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்­சியின் மாற்று அணி­யி­னரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரும் கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­துடன் அடுத்­த­கட்­டத்தை நோக்கி இதனை நகர்த்த முடி­யுமா என்­பது குறித்து ஆரா­ய­வுள்­ளனர்.

அது­மட்­டு­மன்றி மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள 20 ஆவது திருத்த சட்டம் தொடர்­பிலும் இதன்­போது கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வி­ருக்­கி­றது. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பு­ட­னான சந்­திப்பு தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்­சியின் மாற்று அணி முக்­கி­யஸ்தர் டிலான் பெரேரா கேச­ரிக்கு குறிப்­பி­டு­கையில்,

நாம் அனைத்து அர­சியல் கட்­சி­க­ளையும் தொடர்ச்­சி­யாக சந்­தித்து வரு­கின்றோம். அந்த அடிப்­ப­டையில் இன்று சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரை சந்­தித்து பேச்சு நடத்­த­வி­ருக்­கின்றோம். இதன்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் 13ஆவது திருத்த சட்டம் மற்றும் அர­சியல் தீர்வு தேர்தல் முறை மாற்றம், என்­பன தொடர்பில் எமது 16 பேரின் நிலைப்­பாட்டை தெளி­வாக சம்­பந்­த­னிடம் எடுத்­து­ரைப்போம்.

நாங்கள் 16 பேரும் தொடர்ந்து சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் இணைந்­துதான் செயற்­ப­டு­கின்றோம் என்­பதை அவ­ருக்கு விளக்­கிக்­கூ­றுவோம். அதே­போன்று எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னிடம் நாங்கள் கேட்­க­வேண்­டிய சில கேள்­விகள் இருக்­கின்­றன. அதா­வது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பது முக்­கி­யமா?

அல்லது ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் வைத்திருப்பது முக்கியமா என்று நாங்கள் சம்பந்தனிடம் கேள்வி எழுப்ப இருக்கின்றோம். அந்தக்கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார் என்றும் எதிர்பார்க்கின்றோம். ஒரு ஆக்கப்பூர்வமான சந்திப்பு இடம்பெறும் என்று நாங்கள் நம்புகின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!