5 பூனை குட்டிகளை காப்பாற்றிய நாய்: நெகிழ்ச்சி சம்பவம்!

கனடாவில் நாய் ஒன்று 5 பூனை குட்டிகளை கடும் குளிரில் இருந்து காப்பாற்றியசம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய் ஒன்று சாலையின் ஓரத்தில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் குளிரில் பனி படர்ந்து நின்றிருந்ததை கண்ட ஒருவர், அதற்கு உதவ சென்றுள்ளார். அப்போது நாயின் கீழ் 5 பூனை குட்டிகள் இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்த அவர், விலங்கின ஆர்வலர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

அதையடுத்து அங்கு வந்த விலங்கின ஆர்வலர்கள் நாய் மற்றும் பூனை குட்டிகளை மீட்டதோடு, நாயின் உதவி இல்லையெனில் பூனை குட்டிகள் இறந்திருக்கும் என தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!