ஜப்பானில் முதல் மதுபானத்தை அறிமுகம் செய்யும் கோகோ கோலா நிறுவனம்!

குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்து வரும் கோகோ கோலா நிறுவனம் தன் முதல் மதுபானத்தை அறிமுகம் செய்துள்ளது. 125 ஆண்டுகள் பழைமையான இந்நிறுவனம் ஜப்பானில் நேற்று மதுபானத்தை அறிமுகம் செய்தது. இந்த பானம் எழுமிச்சை மனத்துடன் இருப்பதோடு, ஆல்கஹால் அளவு 3 முதல் 7 சதவீதம் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானில் விற்பனையாகும் இந்த மதுபானம், ஜப்பானின் சூகி நிறுவனத்துடன் இணைந்து விற்பனையில் இறங்கியுள்ளது. பீருக்கு போட்டியாக இந்த மதுபானம் களைக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜப்பானுக்கு வெளியே இந்த பானத்தை விற்க திட்டம் இல்லை என்றும் கோகோ கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது. 350-மில்லி லிட்டர் கேன் 1.40 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் இது ரூ.93 ஆகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!