காசோலை மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் அதிபர் கைது!

யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர், காசோலை மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று அவரை விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

1 லட்சம் ரூபாய் மற்றும் 1 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலும் முன்னெடுத்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!