சுவிஸ் தூதரக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ராஜித நனக்கு அறிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டுமென மேற்கொள்ளப்பட்ட நாடகமெனவும் விமர்சித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சுவிஸ் தூதரக அதிகாரி போலியான தகவல்களை வெளியிட்டிருந்தால் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!