அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தை..!

சென்னையில் 5 வது மாடியிலிருந்து தவறிவிழுந்த 8 மாத குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.சென்னையில் தங்கசாலை பகுதியைச் சேர்ந்தவர் மெய்பால். இவர் அப்பகுதியில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில், இவருக்கும் நீலம் என்ற பெண்ணுக்கும் திருமணமான நிலையில், இந்த தம்பதியினருக்கு 8 மாதத்தில் திநிஷா என்ற பெண் குழந்தை உள்ளது.இந்த தம்பதியினர், தங்கசாலை பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 5 வது மாடியில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், மெய்பால், தொழில் விடயமாக பெங்களூர் சென்ற நிலையில், நீலம் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, நேற்று மாலை நீலம், சமையல் செய்து கொண்டிருந்தபோது வீட்டின் பால்கனியில் தவழ்ந்து கொண்டிருந்த குழந்தை திநிஷா, 5-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தது. ஆனால் குழந்தை அதிஷ்டவசமாக அந்த குடியிருப்பின் கீழே நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தின் இருக்கையில் வந்து குழந்தை விழுந்ததுஇதனால் குழந்தைக்கு காலில் சின்ன காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதனையடுத்து உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து பொலிஸர் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!