சமூக விரோதியை இவர் பார்த்தாரா? – யார் நீங்க என ரஜினியை கேட்ட இளைஞர் தகவல்

தூத்துக்குடி மக்களை சந்திக்க சென்ற ரஜினியை பார்த்து சிகிச்சை பெற்று வரும் இளைஞர் யார் நீங்க? என கேட்டார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த இளைஞருக்கு ஆதரவாக மீம்ஸ்களும் பறக்க ஆரம்பித்தன.

அந்த இளைஞரின் பெயர் சந்தோஷ் என்பதும், அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் பிரபல நாளிதழுக்கு பேசுகையில், 100 நாட்களாக தூத்துக்குடியில் போராட்டம் நடந்த போது வராத ரஜினி, பொலிஸ் துப்பாக்கி சூடு நடத்தி எட்டு நாட்கள் கழித்து ஏன் வருகிறார்? ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க பின்னர் தான் வந்து சந்தித்துள்ளார், இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது, அவரது படம் காலா ரீலிசாக உள்ளது.

தமிழகத்தில் ஓட வேண்டும் என்பதற்காகத் தான் வந்துள்ளார் என தெரிவித்துள்ளார். மேலும் சமூக விரோதியை இவர் பார்த்தாரா? இவருக்கு எப்படி தெரியும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!