4 வயது சிறுவன் ஒருவன் சலவை இயந்திரத்தின் மீது ஏறி விளையாடி அந்த இயந்திரத்துக்குள் விழுந்து சிக்கிக்கொண்ட சம்பவம் கிழக்கு சீனாவில் இடம்பெற்றுள்ளது. ஷான்டொங் மாகாணத்திலுள்ள ஸிபோ நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சிறுவன் சலவை இயந்திரத்தில் விழுந்து அழுவதைக் கேட்டு அங்கு வந்த அவனது தாயார் அவனது நிலை கண்டு அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், அவர் அந்த சலவை இயந்திரத்தின் உருளைக் கட்டமைப்பில் சிக்கியிருந்த தனது மகனை விடுவிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியைத் தழுவியது.
இதனையடுத்து அவசரசேவைப் பிரிவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அவசர சேவை உத்தியோகத்தர்கள் 22 நிமிட பெரும் போராட்டத்தை மேற்கொண்டு அந்த சலவை இயந்திரத்தின் வெளிப் பாகத்தை வெட்டி சிறுவனை மீட்டுள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!