வடக்கு நைஜீரியாவில் கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து உயிரிழந்த 16 வயது மணப்பெண்!

வடக்கு நைஜீரியாவில் உள்ள டன்பட்டா பகுதியில் திருமணம் நடக்கவிருந்த பெண் ஒருவர் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தார். 16 வயதுடைய ஃபாத்திமா அபுபக்கருக்கு, டிசம்பர் 19ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. மணப்பெண் அவரது அத்தை வீட்டில், நண்பர்களுடன் கொண்டாடி இருந்திருக்கிறார். அப்போது கிணற்றுக்கு மிக அருகில் அவர் நின்று கொண்டிருந்தபோது, தவறுதலாக உள்ளே விழுந்துவிட்டதாக, உயிரிழந்த பெண்ணின் தந்தை பிபிசியிடம் தெரிவித்தார்.

திருமணத்திற்கு ஃபாத்திமா மிகுந்த ஆவலுடன் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள மணமகனால், தொலைப்பேசியில்கூட பேச முடியவில்லை. திருமணத்திற்காக அழைக்கப்பட்ட விருந்தினர்கள், தற்போது இறுதி சடங்கிற்காக தங்கள் வீட்டில் காத்திருப்பதாக, உயிரிழந்த மணப்பெண்ணின் தந்தை தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!