சிறுவனை தனியறையில் அடைத்து தாக்கிய பெண் ஊழியர்.. வீடியோ வெளியானதால் தற்கொலை….?

அமெரிக்கப்பள்ளி ஒன்றில் 7 வயது சிறுவன் ஒருவனை தனியறையில் அடைத்துவைத்து தாக்கிய பள்ளி ஊழியரான ஒரு பெண், அந்த சம்பவம் அடங்கிய வீடியோ வெளியானதால் விசாரணைக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டார்.பள்ளிகளில் தவறு செய்யும் மாணவர்களை, ஜன்னல் கூட இல்லாத தனியறைகளில் அடைத்துவைக்கும் ஒரு பழக்கம் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் இல்லினாய்சில் ஒரு பள்ளியில் கவனக்குறைவு மற்றும் அதிக துறுதுறுவென இருக்கும் பிரச்னை கொண்ட Staley Sandy-Ester (7) என்னும் ஒரு சிறுவனை ஒரு பெண் தனியறையில் அடைத்துவைத்ததோடு தாக்கவும் செய்துள்ளார்.மேலும் அதே பள்ளியில் Nicholas Izquierdo என்னும் பள்ளி ஊழியரும் மாணவர்களை தாக்கியுள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடியோ வெளியானதைத் தொடர்ந்து விசாரணை ஒன்று துவக்கப்பட்டது.விசாரணை துவங்கியதும், Nicholas Izquierdo மற்றும் Staleyயை தாக்கிய பெண் ஆகிய இருவரும் தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டனர்.இந்நிலையில், விசாரணைக்கு அஞ்சி அந்த பெண் ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். Nicholas மீது விசாரணை தொடர்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!