மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்துடன் தொடர்புபட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவது குறித்து சிங்கப்பூர் அரசாங்கத்துடன் வெளிவிவகார அமைச்சர் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றார் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தனவிடம் மத்திய வங்கி ஊழல் விடயத்தில் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.
சுவிஸ் தூதரக விடயத்தில் இரண்டு நாடுகளும் இராஜதந்திர ரீதியில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி அதற்கமைய செயற்பட்டு வருகின்றோம். எனவே இது நாடுகளுக்கு இடையில் குழப்பங்களையோ முரண்பாடுகளையோ ஏற்படுத்தாது என்றும் இதன்போது அவர் கூறினார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!