யாழ். சிறைச்சாலை முன் அனுமதியின்றி விஜயன், குவேனி, புத்தர் சிலைகள்!

இலங்கைக்கு விஜயன் வந்தமையைக் குறிக்கும் வகையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக விஜயன், குவேனி மற்றும் புத்தர் சிலைகள் இன்று காலை திறந்துவைக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கைதி ஒருவர் 5 அடி உயரத்தில் அமைத்துள்ள இந்த சிலை நேற்று இரவு வெளியில் எடுத்துவரப்பட்டு இன்று காலை வருகை தரும் சிறைச்சாலைகள் ஆணையாளரினால் திறந்து வைக்கப்படவிருக்கிறது.

இராணுவ முகாம்களிலும், வைக்கப்பட்ட விகாரைகளும் புத்தர் சிலைகளும், பெளத்த மத சின்னங்களும் இப்போது சிறைச்சாலைகளிலும் வைக்கப்படுகிறது.

இந்த சிலைகளை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெறப்படவில்லை என்றும், சட்ட விரோதமாக அமைக்கப்படும் இந்த சிலைகளுக்கு எதிர்த்து போராட்டம் நடத்த வருமாறு பொதுமக்களை யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் அழைத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!