ஊடக சந்திப்புக்காக கைது செய்ய சட்டத்தில் இடமில்லை! – அஜித் பெரேரா

ஊடக சந்திப்பு ஒன்றிலே கூறப்பட்ட விடயங்களுக்காக ஒருவரை கைது செய்யும் முறை எதுவும் குற்றவியல் சட்டத்தில் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

“பொய்யான தகவல் ஒன்றை செய்தியாளர் சந்திப்பில் கூறினால் கூட ஒருவரை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை.பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு வழங்கப்பட்ட பிணையினால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட பின்னடைவை மாற்றும் வகையிலேயே தற்போது ராஜித சேனாரத்னவை கைது செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!