கோவை சிறுமி கொலைவழக்கில் நீதிமன்றத்தின்அதிரடி தீர்ப்பு ..!!

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது கோவை சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கு.இவ்வழக்கில்சந்தோஷ்குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்த 1ஆம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் 25ஆம் திகதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போனார்.

அடுத்த நாளான 26ஆம் திகதி வீட்டின் பின்புறத்தில் இருந்து துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கோவையில் பல இடங்களில் போராட்டமும் நடைபெற்றது.பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமியின் வீட்டிற்கு எதிரே மனைவியை பிரிந்து பாட்டி வீட்டில் வசித்து வந்த தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை அதே மாதம் 31ஆம் திகதி கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில்இதற்கிடையே, 18ஆம் திகதி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி வாதம் நடந்தது. இருத்தரப்பு இறுதி வாதம் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிபதி ராதிகா அறிவித்தார்.

அதன்படி சற்றுமுன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பில் கொடூரன் சந்தோஷ்குமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கான தண்டனை விவரத்தை இன்று மாலை 3 மணிக்கு நீதிமன்றம் அறிவிக்கிறது.இந்த வழக்கில் சிறுமியின் உடலில் மற்றொரு நபருடைய விந்தணுவானது டி.என்.ஏ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த நபரை கண்டுபிடிக்க சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!