ஐதேக தலைமையின் அனுமதியுடனேயே செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் ராஜித

ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களின் அனுமதியுடனேயே, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தார் என, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

“வெள்ளை வான் கடத்தல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு பதிலாக, அதனை வெளிப்படுத்தியவர்களை சிறிலங்கா அரசாங்கம் கைது செய்தது.

அரசாங்கம் அந்த பிரச்சினைகளை விசாரித்திருக்க வேண்டும். மாறாக, வெளியிட்டவர்களை அரசாங்கம் அழைத்துச் சென்று அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.

வெள்ளை வான் தகவல்கள் வெளியிடப்பட்ட செய்தியாளர் சந்திப்பை ஐதேக தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தான் ராஜித சேனாரத்ன நடத்தியிருந்தார்.” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!