நெடுந்தீவில் தரையிறங்கிய ஐந்து அகதிகள் கைது!

சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு வந்த இலங்கை அகதிகள் 5 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதி இவர்கள் நெடுந்தீவு பகுதிக்கு படகு மூலம் வருகை தந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இங்கிரிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் அடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். ஏனையவர்கள் பேசாலை மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைதானவர்களை மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!