பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் பிரதானியாக சவேந்திர சில்வா

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அவருக்கு இந்தப் பதவி, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால் வழங்கப்பட்டுள்ளது.

அவர், பதில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாகவும் இன்று தொடக்கம் பணியாற்றுவார் என, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு அமைய, இராணுவத் தளபதி பதவிக்கு மேலதிகமாக அவர் இந்தப் பதவியையும் வகிப்பார் எனவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!