கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுடனும், பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

2020 புத்தாண்டை முன்னிட்டு, வாழ்த்துக் கூறுவதற்காக, சிறிலங்கா தலைவர்கள் மற்றும் பூட்டான், நேபாளம், மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் இந்தியப் பிரதமர் நேற்று தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார்.

இந்த தொலைபேசி உரையாடலின் போது, இந்தியப் பிரதமர் மோடியும், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவும், 2020 ஆம் ஆண்டில் நட்புறவுகளை மேம்படுத்துவதில் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவுடன் நெருக்கமான மற்றும் விரிவான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!