ஆபிரிக்காவுக்கான விசேட தூதுவராக கணநாதன்!

ஆபிரிக்காவுக்கான விசேட தூதுவராக வேலுப்பிள்ளை கணநாதனை பிரதமர் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, வேலுப்பிள்ளை கணநாதனுக்கான நியமனப் பத்திரத்தை நேற்று அலரி மாளிகையில் கையளித்துள்ளார்.

வேலுப்பிள்ளை கணநாதன் உகாண்டாவில் இலங்கையின் கெளரவ தூதுவராக கடமையாற்றுகிறார். பிரபல தொழிலதிபரான கணநாதன், உகாண்டாவை வதிவிடமாக கொண்டுள்ளார். இவர் பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி மற்றும் புனித ஜோசப்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!