பதுளை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்குமாறு ஆலோசனை!

பதுளையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.

அதன்படி உயிரிழந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா வழங்குமாறு மஹிந்த அமரவீர இலங்கை போக்குவரத்து சபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அத்துடன் விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்படவுமுள்ளது.

இந்த விபத்துக் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!