தன்னை ஏமாற்றிய மணப்பெண்ணை மணமேடையில் வைத்து பழிதீர்த்த மண மகன்..!!

தென் கிழக்கு சீனாவில் உள்ள ஃபூஜியான் பகுதியில் கடந்த டிசம்பர் 31ம் தேதி திருமண நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண மக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூடியிருந்தபோது மண மக்கள் இருவரும் கை கோர்த்து திருமண மேடைக்கு வந்தனர். அவர்கள் இருவரும் திருமண மேடைக்கு வந்து நிற்கும்போது, பின்னால் இருந்த திரையில் திடீரென ஒரு வீடியோ திரையிடப்பட்டது. அந்த வீடியோவை பார்த்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

மேலும், அந்த வீடியோவை பார்த்த மணப்பெண் தனது கையிலிருந்த பூச்செண்டை மணமகனின் முகத்தில் வீசிவிட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அந்த வீடியோவில் அப்படி என்னதான் இருந்தது என்ற கேள்விக்கு, வீடியோவில் மணப்பெண் வேறு ஒருவடன் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் காட்சி திரையிடப்பட்டுள்ளது. அதனை அந்த மணமகனே திரையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணமகள், அவரது சகோதரியின் கணவருடன் நெருங்கிய நட்பில் இருந்ததாக இந்த சம்பவம் குறித்து மணமகனின் நண்பர்கள் கூறினார்கள்.மேலும் அந்த வீடியோவிலும் அவருடனே மணமகள் இருந்ததாகவும் தெரிவித்தார்கள். மணமகள் அவருடைய சகோதரியின் கணவருடன் நெருக்கமாக இருந்தது, அவர் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட மணமகனின் வீட்டு படுக்கையறையாகும்.

மணமகன் அந்த அறையில் ரகசிய கமராவை பொருத்தியுள்ளார். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணமகன், அந்த பெண்ணை பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே திருமண நாள் வரை காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து மணமகன் கூறும்போது, மணப்பெண்ணுக்கு ஒரு வீடும், காரும் பரிசளிப்பதாக கூறிய பிறகே அவர் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், தன்னை ஏமாற்றிய பெண்ணை திருமண நாளன்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்பாக பழி வாங்கிய சம்பவம், பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் சீனாவில் உள்ள சமூக வலைதளைகளிலும் வைரலாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!