நாளாந்த மின்சார நுகர்வு அதிகரிப்பு

நாளாந்த மின்சார நுகர்வு அதிகரித்துள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சுலக்ஷனா ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

நிலவும் மழைக்காலம் காரணமாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவே அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின் மற்றும் எரிசக்தி அமைச்சகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!