விமானத்தில் அடுத்தடுத்து இருவர் மரணம் – கட்டுநாயக்கவில் அவசர தரையிறக்கம்!

ஜெட்டாவில் இருந்து இந்தோனேஷியாவின் சுரபயா விமான நிலையம் நோக்கி பயணித்த தாய் எயார்வேய்ஸ் விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.

குறித்த விமானத்தில் இரண்டு பயணிகள் சுகயீனமடைந்துள்ளமையினால் அவசரமாக தரையிறக்க அனுமதியளிக்குமாறு விமானி கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கமைய இன்று அதிகாலை 2.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

எனினும் விமானத்தில் சுகயீனமடைந்ததாக கூறப்படும் இரண்டு நபர்களும் உயிரிழந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த பெண் மற்றும் ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!