2020 மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் இறுதிவாரத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
பிரதான அரசியல் கட்சிகள் முன்கூட்டியே தேர்தல் ஆயத்தப்பணிகளில் இறங்கியுள்ளன.
கூட்டணி அமைத்தல், ஆசனப்பங்கீடு, அமைப்பாளர் நியமனம் என நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. சில கட்சிகள் திண்டாட்ட நிலையில் இருந்துவருகின்றன.
இந்நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், முக்கிய வேட்பாளர்களும் எந்தெந்த மாவட்டங்களில் போட்டியிடவுள்ளனர் என்ற விபரத்தை பார்ப்போம்.
மஹிந்த ராஜபக்ச – குருணாகலை மாவட்டம்.
ரணில் விக்கிரமசிங்க – கொழும்பு மாவட்டம்.
அநுரகுமார திஸாநாயக்க – கொழும்பு மாவட்டம்.
சம்பந்தன் – இம்முறை போட்டியிடவில்லை. தேசிய பட்டியல் ஊடாக சபைக்கு வருவார்.
ஆறுமுகன் தொண்டமான் – நுவரெலியா மாவட்டம்.
மனோ கணேசன் – கொழும்பு மாவட்டம்.
வீ. இராதாகிருஷ்ணன் – நுவரெலியா மாவட்டம்.
பழனி திகாம்பரம் – நுவரெலியா மாவட்டம்.
சம்பிக்க ரணவக்க – கொழும்பு மாவட்டம்.
ரவூப் ஹக்கீம் – கண்டி மாவட்டம்.
ரிஷாட் பதியூதின் – வன்னி.
சஜித் பிரேமதாச – கொழும்பு (அம்பாந்தோட்டையிலிருந்து இம்முறை கொழும்பு வரவுள்ளார்.)
விஜயதாச ராஜபக்ச – கம்பஹா மாவட்டம். (கொழும்பு மாவட்டத்திலிருந்து அங்கு செல்கிறார்.)
விமல்வீரவன்ஸ – கொழும்பு மாவட்டம்.
உதய கம்மன்பில – கொழும்பு மாவட்டம்.
மைத்திரிபால சிறிசேன – பொலன்னறுவை மாவட்டம்.
தயாசிறி ஜயசேகர – குருணாகலை மாவட்டம்.
தினேஷ் குணவர்தன – கொழும்பு.
வாசுதேவ நாணயக்கார – இரத்தினபுரி.
நிமல்சிறிபாலடி சில்வா – பதுளை.
மாவை சேனாதிராஜா – யாழ்ப்பாணம்.
சித்தார்த்தன் – யாழ்ப்பாணம்.
செல்வம் அடைக்கலநாதன் – வன்னி.
வேலுகுமார் – கண்டி.
திலகர் – நுவரெலியா-
அரவிந்தகுமார் – பதுளை.
வடிவேல் சுரேஷ் – பதுளை.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!