விபத்தில் சிக்கிய தாய் மற்றும் மகன்: காப்பாற்ற யாரும் முன்வராததால் உயிரிழந்த சோகம்!

மாமல்லபுரம் அருகே, சாலையை கடக்க முயன்ற தாயும்,4 வயது மகனும் கார் மோதி காயம் அடைந்த நிலையில் காப்பாற்ற ஆளின்றி உயிரிழந்தனர். புதிய கல்பாக்கத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தியின் மனைவி திலகவதி. இவர் எல்கேஜி மாணவனான 4 வயது மகன் திருமுருகனை கோவளம் தனியார் பள்ளிக்கு அழைத்துச்சென்றார். பேருந்து நிறுத்தம் அருகே சென்டர் மீடியன் வழியாக சாலையை கடக்க முயன்றபோது, சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார் இருவர் மீதும் மோதியது. இதில் சாலை ஓரம் தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் வெகுநேரமாக உயிருக்கு போராடிய நிலையில், யாரும் காப்பாற்ற முன் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

தகவல் அறிந்து மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்த போது இருவரும் இறந்து விட்டனர். காரை திருவிடந்தை அருகே நிறுத்தி தப்பிச் சென்ற ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். இங்கு பாதசாரிகள் சாலையை கடப்பதை குறிக்கும் வகையில் வெள்ளை எச்சரிக்கை கோடுகள் உள்ளது. அதை ஓட்டுனர் கவனித்து வேகத்தை குறைத்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!