தமக்கு எதிரான எடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கையை நிறுத்துமாறு தெரிவித்து, இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஆகியோர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழிந்து விட்டதாக கூறவேண்டாம் என்று, கேட்டுக்கொண்டதுடன், அவ்வாறு கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!